முகப்பு...

Tuesday 3 January 2012

அன்பெனும் வன்முறை....!!!

அன்பும் வன்முறைதான்..

நான் உன் மீது கொண்ட அன்பும்
வன்முறைதான்...

உனையே சுற்றிவரும் என் மனமும்

வன்முறையானதுதான்...

உன்னோடு பேச விரும்புவதும்
வன்முறைதான்...

உன் குறுந்தகவலில் கண்விழிக்க
நினைப்பதும் வன்முறைதான்...

செய்தி அனுப்புவதும்
வன்முறைதான்...

உன்னைக் காண விரும்புவதும்
வன்முறைதான்...

உனை என்னோடு
இணைத்துப் பார்ப்பதும்
வன்முறைதான்...

என்னுடனேயே.,
இருத்திப் பார்க்க நினைப்பதும்
வன்முறைதான்...

தள்ளியிருந்தாலும்.
தனதாய்ப் பார்ப்பதும் வன்முறைதான்...

நான் கொண்ட நம்பிக்கையும்
வன்முறைதான்...

வன்முறையால்
வன்முறையை
வன்முறையாக
வெளிப்படுத்தும் என் அன்பும்
வன்முறைதான்..

ஓ..!
நீ அஹிம்சாவாதியல்லவா..!!??

வன்முறைக்கு..,
வன்முறை பதிலாகாதே...

வன்முறையான என்
அன்பை நிராகரித்து
அஹிம்சையால் என்னன்பை
புறக்கணிக்கிறாயோ....???



2 comments:

  1. வன்முறையாக இந்த கவிதையை ரசித்தேன்...

    ReplyDelete
  2. வன்முறையாய் அன்பை இரசித்ததற்கு நன்றி..:)

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__