முகப்பு...

Wednesday 11 January 2012

இதயத்தின் இதயம்......!!!


என் இதய வீணையில்
நாதம் எழுப்புபவனே....!!

இடம் மாறிய
என்னிதயத்தை
உனதாய் நீயும் போற்றாயோ...?

என்னவனே..!!
என்னிதயம் இருக்குமிடம்
அறியாதவனா நீ...??

உன் மனதோடு
என் மனமும் உரையாட
எனை மனநோயாளியாய்க்
காண்பதேனோ...??

என் மனக்கோட்டையில் குடிகொண்டு
என் மதிமயங்கச் செய்வதுமேனோ.??

உனைச் சுமக்கும்
என்னிதயத்தின்
நிறை தாங்காயோ நீ..??

என்னிறை தாங்கா நீயும்
எனையிறக்கி உனக்காய்
ஏங்கவைப்பதும் ஏனோ...??


சிப்பிக்குள் முத்தாய் உனைப் போற்றும்
என்னிதயம் தஞ்சம் வந்த உன்னிடம்.,
மங்கள நாணணிந்து..
மஞ்சம் வர முடியாமல் போனதேனோ..??


பேரன்பின் பெருங்கடலுள் சங்கமித்துப்
பேரானந்தத்தில் திளைத்து.,

நெஞ்சத்திலும், மஞ்சத்திலும்
உனைச்சுமக்க விரும்பும் நான்...
உன் பேரன்பால்.,
உன் கரு சுமந்து..

பிரம்மனும் பிரமிக்கக்
கட்டபொம்மனாய்,
ஜான்சிராணியாய்
மகவுகளை ஈன்றெடுத்து.,
உன் குலம் தழைக்க செய்யும்
மனமிருந்தும் வரமில்லாமல்
போனதேனோ..??
யார் வாங்கிவந்த சாபமோ....??



3 comments:

  1. மன நோயாளியா..அப்படிலாம் நினைக்கலையே..:)

    ReplyDelete
  2. பிரம்மனும் பிரமிக்கக்
    கட்டபொம்மனாய்,
    ஜான்சிராணியாய்
    மகவுகளை ஈன்றெடுத்து.,
    உன் குலம் தழைக்க செய்யும்
    மனமிருந்தும் வரமில்லாமல்
    போனதேனோ..??
    யார் வாங்கிவந்த சாபமோ....?? Arumai

    ReplyDelete
  3. @தமிழ்தாசன்....வருகைக்கு நன்றி சகோ...:):):)

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__