முகப்பு...

Monday 9 January 2012

மனமென்னும் குதிரை.....



என் 
உள்ளத்து ஆசைகளைக்
கொட்டிவிடத் துடிக்கும்
மனக்குதிரை
உனை நோக்கிப் பயணிக்க.,


நான்
காணுமிடமில்லாம்
நீயே காட்சியளிக்க...

நோக்கும் பொருளெல்லாம்..
உனதாய்த் தோன்ற..

சிந்தையெல்லாம்..
நீயே நிறைந்திருக்க.....

என் மனதாளும் உன்னை.,
உனக்குணர்த்தத் தயங்கும் எனக்குக்
கலைமகள்  அருளியிருந்தாள்.,
காவியமாய் வடித்திருப்பேன்..

அலைமகளும் 
அருளியிருந்தாள்...
உன்னிடம் கூறியிருப்பேன்..

அலைமகளும், கலைமகளும்
ஆசி வழங்காதிருக்க...

கலைமகளின் ஆசிபெற்ற.,
மனமறியும் மொழியறிந்த
நீயே...
அறிவாயா..? என் மனமறிவாயா....??



2 comments:

  1. @தமிழ்தாசன்...நன்றி சகோ..தொடர்ந்து உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்தவும்..:):):)

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__