முகப்பு...

Sunday 8 January 2012

நான் யார்...??



நான் யாரென
என்னை நானறிய

எனையறிந்த நீ..
என்னை
எனக்கு உணர்த்தாமல்..

நீயறிந்த என்னை
நான் அறிவது
எங்ஙனம்..??

என் சிவனே விளக்கு..
என் அறியாமையை விளக்கு...
                                   ************************************************

சரீரம்....

 

சாம்பலாகும் சரீரமென அறிந்தே
இவன்.,
பயமில்லா வாழ்க்கை வாழ்கிறான்.....

ஈருடல் ஓருடலானது
இங்கே
இதயம் இணைந்ததாலே.

சாம்பலாகும் சரீரமும்
சுகம் விரும்ப..

அழிவில்லா ஆன்மாவும்
ஆசை ஒழிக்குமா என்ன...???

அழிவில்லா ஆன்மா
என்றே யிவன்.,

அனைத்தும் தனதாக்க 
ஆட்டம் போட்டு.. 
அடுத்தவனை அழித்து 
ஆளுவதற்கு ஆசைப்படுகிறானோ...??

           ***********************************

4 comments:

  1. இது சின்ன சின்ன சிதறல் மட்டும் இல்லை.. தேன் கலந்த சிதறல்..

    ReplyDelete
  2. சாம்பலாகும் சரீரமென அறிந்தே
    இவன்.,
    பயமில்லா வாழ்க்கை வாழ்கிறான்.....
    இந்த வரிகள் இந்த கவிதையை தாங்குகிறது

    ReplyDelete
  3. @தமிழ்தாசன்...தங்கள் கருத்திற்கு நன்றி சகோ...:):):):)

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__