முகப்பு...

Sunday 1 January 2012

கடவுளின் வரம் 2012.....

கடவுள்
கனவில் தோன்றி

வரமொன்றளிக்கிறேன்..
வேண்டுவன கேளெனக் கூற...

வேண்டியவர் வேண்டியதை
வினவுவதல்ல வரம்..
வேண்டியதை வேண்டிய நேரத்தில்
வேண்டியவர் வேண்டாமலேயே
வேண்டியவர்க்கு
வழங்குவதே வரம்..

நல்லதுவெதுவோ அதையே
வரமாய் வழங்கிடுவென நானும் வேண்ட..

நாட்கள் பல நானும் சுமந்து..
நல்லவிதமாய் பிரசவித்து...

மூன்று கோடியே,
ஐந்து இலட்சத்து
முப்பத்து ஆராயிரம் நொடிகளான
நேரமென்றக் குழந்தையை
உனக்காய் பரிசளிக்கிறேன்..

நீயும்
அதை விரயமடிக்காமல்...
நல்வழியில் பயன்படுத்தி
பேரின்பத்தை அடைவாயென
கடவுளும் ஆசிர்வதிக்க...

கடவுள் தந்தக் குழந்தையாம்.,
நேரத்தை கச்சிதமாய்
காப்பாற்ற.,
காலமதை கணக்கிட்டு
வீணடிக்காமல்...
காரியத்தை காலத்தே செய்வேன்...

வரமென வந்த
குழந்தையோடு இணைந்து..

உலக மக்களுக்கு..,
இயற்கையழகை இனிதே
வழங்கிடுவேன்...

செயற்கையின் அடிமையான
நான் சிந்தனையை வளமாக்கி
இயற்கையோடு இயன்றவரை 
இணைய முற்படுவேன்...

நானும்
கண் விழிக்கிறேன்..
கடவுளுக்களித்த வாக்கை
காப்பாற்றவே...
கடுமையாய் உழைத்திடுவேனே....
நீங்கள்....?????



1 comment:

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__