முகப்பு...

Sunday 13 November 2011

கதிரவன்.....

கதிரவனே., 

வெட்கத்தினால்
பெண்களுக்கு மட்டுமல்ல.,
ஆண்களுக்கும்,
கண்ணம் சிவக்கும் என்பதை.,

நீ
கண்ணுறங்கும்
வேளையில்,
உன் நிலாக்காதலியை
காண நேரிட்டதால்...
உண்டான வெட்கத்தினால்,
உந்தன் கண்ணம்
சிவந்ததைக் கண்டு
உணர்ந்தேன்... 

                                *************************************************


மெல்ல.,
கேசம் ஒதுக்கி,
நெற்றிப்பொட்டு களைய..

ஆடைகளைத் தளர்த்தி...

நா வறண்டு.,
உடல் அயன்று....

காலிரண்டும்பின்னி,
தன்னிலை மறந்து போய்..
அப்பப்பா...

ஓ, கதிரவனே,
உன் கதிர்வீச்சைக் குறைத்துக்கொள்..
வெட்கை தாங்கமுடியவில்லை...!!
                                                           

No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__