முகப்பு...

Sunday 28 December 2014

தத்துவச்சிதறல்கள்...

ஞானம்தேடுபவர்களுக்கு
பெண் ஒரு போதிமரம் ..!
மோகமடைந்தவர்களுக்கு 
அவளொரு போ(மோ)கப்பொருள்...!
************
பசியோடு இருப்பவனையழைத்து
பந்தி பரிமாறி 
உணவருந்த எத்தனிக்கையில்..
கரம் தடுத்து வெளியேறவைப்பது போன்றமையும் 
வாழ்க்கை சிலபலநேரங்களில்.
****
பற்றற்ற தன்மையை அடைந்தேன் 
என உணரும்போதே 
பற்றற்ற தன்மையை 
பற்றியிருப்பதிலிருந்து பற்றறுக்கப்படவில்லை 
என்பது உணர்த்தப்படுகிறது..
******

8 comments:

  1. தத்துவம் அருமை! நன்றி!

    ReplyDelete
  2. அக்கா.. அனைத்தும் அருமை.

    ReplyDelete
  3. அனைத்தும் அருமை அதிலும் இரண்டாவது மிக அருமை மட்டுமல்ல உண்மையும் கூட

    ReplyDelete
  4. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அக்கா...

    ReplyDelete
    Replies
    1. நன்றியும், மகிழ்ச்சியும் தம்பி... தம்பியின் இல்லத்தாருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்..வாழ்க வளமுடன். :)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__