முகப்பு...

Wednesday 5 February 2014

அன்பின் அகராதியிலிருந்து...

நான் தோற்கும் இடத்தில் அவனும், அவன் தோற்கும் இடத்தில் நானும் தடுமாறாமல் கரம் பிடித்து நிற்பது.:)
***
அவனுக்கு அனுப்பிய குறுந்தகவலை அவனிடமிருந்து பதில்வரும் வரை அவனது பதிலாகவே பாவித்து அடிக்கடி படித்துப்பார்ப்பது..
***

என்றோ அவன் எழுதிய கடிதத்தை இன்றும் படித்து மகிழ்வது...

***
எங்கோ இருந்தபடியே உள்ளத்தை ஆட்சிசெய்யும் அரசன் அன்புக்குரியவன். 
***

அன்புடையவனின் இதயத்தில் சிறையிருப்பதும் சொர்க்கமே...... 

***
அன்புக்குரியவனின் பெயரை எங்கோ எவரோ உச்சரித்திடினும் கேட்ட நொடிதனில் முகத்தோட்டத்தில் புன்னகைப்பூ மலர்வது...!!
***

16 comments:

  1. அன்புக்குரியவருக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. Replies
    1. :) அதே அதே...தங்கள் வருகைக்கு நன்றி தோழி..:)

      Delete
  3. எல்லாமுமே அன்பின் உச்சக்கட்ட வெளிப்பாடுகள் :)

    ReplyDelete
  4. எல்லாமே அன்புக்குரியவரா இருக்கு...
    அன்பு என்றும் தொடர வாழ்த்துக்கள் அக்கா..

    ReplyDelete
  5. அருமை அருமை
    அவனென்றால் அது நானும் அவளும்
    அவளென்றால அது அவளும் நானும்
    என்கிற பாடல் வரிகள் நினைவுக்கு வந்து போனது
    அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. :) மிக்க நன்றி தங்களின் வாழ்த்திற்கு..:)

      Delete
  6. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-4-part2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றியும்,மகிழ்ச்சியும் சகோ..:) _/\_ பார்வையிடுகிறேன்

      Delete
  7. அன்பின் அகராதி அருமை..!

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__