முகப்பு...

Tuesday 17 September 2013

மனச்சிதறல்..!!

மனத்தின் மணமறிந்து
மனதாள்பவன்...
மனமறியாது
அள்ளிவீசும் வார்த்தைப்பூக்களில்
எழும் திராவக நெடியை நுகரமுடியாது
உயிருக்குத் துடிக்கும் நீரில்லா மீனாய்​...

இதயவெள்ளத்தில்
பெருக்கெடுக்கும் உணர்ச்சிகள்
உற்றார்களை அடித்துச்செல்லாதிருக்க
என் மௌனங்கள் மதகாகின்றன..!!
மௌனத்தின் மொழியறிந்த
வார்த்தையின் வாசம்விரும்பாதவனே..
விருப்பத்தின்
விருப்பத்திற்காய்
விரும்பியேற்கிறேன் மௌனத்தை...:)
என் மௌனம் உனை மகிழ்விக்கட்டும்...!!

10 comments:

  1. வணக்கம்
    இதயவெள்ளத்தில்
    பெருக்கெடுக்கும் உணர்ச்சிகள்
    உற்றார்களை அடித்துச்செல்லாதிருக்க
    என் மௌனங்கள் மதகாகின்றன..!!

    கவிதையின் வரிகள் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...வாங்க..நன்றி தோழமையே..:)

      Delete
  2. //​விருப்பத்தின்
    விருப்பத்திற்காய்
    விரும்பியேற்கிறேன் மௌனத்தை...:)
    என் மௌனம் உனை மகிழ்விக்கட்டும்...!!//

    ஆழமாக உணர்ந்து, கசப்புடன் அனுபவித்துச் சொல்லியுள்ள அர்த்தமுள்ள வரிகளுடன் கூடிய அற்புதமான படைப்பு.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. என் மௌனம் உனை மகிழ்விக்கட்டும்!..

    கவித்துவமான வரி!.. அருமை!..

    ReplyDelete
  4. /// என் மௌனம் உனை மகிழ்விக்கட்டும்...!! ///

    Classic...

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__