முகப்பு...

Tuesday 2 October 2012

ஓட்டம்...!!


பார்ப்பதற்கு
வேலையுமில்லை
நிற்பதற்கு
நேரமுமில்லை..
காலைமுதல்
மூச்சிரைக்க ஓடித்திரிந்து
கலைத்து..
உடல் ஓய்ந்து
ஓய்வெடுக்க...

ஓடத்துவங்கியது
சிந்தனை..
செய்ததென்ன..
செய்வதெதற்கு..??

ஓடியெதெதற்கு...
ஓடியதெங்கே..
ஓடுவது யாருக்காக..
ஓடவைப்பது எது....
ஓடுவது வாழ்க்கையா..
வாழ்வது வாழ்க்கையா..??
சாதித்தது என்ன..??

பலருமிங்கே
பலனறியாமலே ஓட..
ஓட்டமே வாழ்வாய்..
ஓடியபடியே..!!

ஓட்டமும் நிறுத்தி
வாழ்வையறிவதெப்போது..??
வாழ்வதெப்போது...??

தொங்கிய நாக்கில்
சிந்தும் உமிழ்நீருடன்
ஓய்வெடுத்தபடி
உற்றுநோக்கும் நாயும்
வினவுகிறதோ நம்மிடம்..!!


7 comments:

  1. எல்லாம் நிலை இல்லாத பணத்தை தேடித் தான்...

    ReplyDelete
  2. இங்கு எல்லாத்துக்கும் ஓட வேண்டித்தானே இருக்கிறது அக்கா...

    எல்லாரும் ஓடிக்கிட்டே இருக்காங்க நானும் ஓடிக்கிட்டு இருக்கேன்... எங்கே ஓடுறோம் எதுக்கு ஓடுறோம் என்பது தெரியாது ஆனால் ஓட்டம் நிற்பதும் இல்லை... நாம் ஓடுவதை நிறுத்துவதும் இல்லை...

    அருமையான கவிதை...

    ReplyDelete
  3. ஆஹா.....படிக்கும் போதே
    நாயின் செயற்பாடு ஒன்று ஞாபகத்துக்கு வந்தது கடைசியில் நாயோடு ஒப்பிட்டே முடித்து விட்டீர்கள்
    எல்லாம் சுகமான வாழ்க்கையைத் தேடி இருக்கின்ற சுகத்தையே இழக்கத்தான்.......

    ReplyDelete
    Replies
    1. ::):):) உண்மைதான் தோழர்..எது சந்தோசமென அறியாமலேயே ஓடுகிறோம்..

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__