முகப்பு...

Saturday 1 October 2011

மருத்துவமனை....






ஆழ்மனத்தின் அமைதியை அமைதியாய்
அமர்ந்து மனம் தேடுகிறது..



மனம் விரும்பும் மனதை மனம் அருகில் 
கொணர நினைக்குமிடம்..

கண்ணுக்குத் தாயாய் காட்சியளிக்கும்
செவிலித்தாய்..

காக்கும் கடவுளாய்த் தோன்றும்
மருத்துவர்..

சொட்டு சொட்டாய் உயிர்த்தண்ணி
உணவாய்..

எமனின் பாசக்கயிறா? ஈசனின் காக்கும் கயிறா?
என அஞ்சத்தோன்றும் மருத்துவரின்
இதயத்துடிப்பு மானி ?! 

இறைவனை அடைவோமா இல்லை இல்லத்தை அடைவோமா??
வினவும் மனம்..

எம்மதமும் சம்மதம் என எண்ண வைக்கும் நேரம் அது.
அங்கே முகமறியாதவனின் குருதி தனக்கேறும் சமயம்..



சொர்க்கத்தையும், நரகத்தையும் 
ஒரு சேர பார்க்க நேருமிடம்..

மனதை  மனம் இனங்காணும் இடமிது..


அவன் பணம் காய்க்கும் மரமாய் விளங்குமிடம்
மருத்துவர்களுக்கு..

இங்கு தேவை பணமா? மனமா?
எழுகிறது வினா..

பணத்துடன் கூடிய மனம், மனதுடன் கூடிய பணம்..
இரண்டுமே தேவைப்படுமிடம்..

பணமட்டுமே வாழ்வில்லை என உணரவைக்கும் போதிமரம் அது
நோயாளிக்கு மட்டும்..!!!

2 comments:

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__