முகப்பு...

Wednesday 28 September 2011

"நிகழ்தகவு..."



என் விடியல் கூட உன்னை
எண்ணியே தொடங்குகிறது..

நித்தமும் உன்னை எண்ணி
விழித்தபடி உறங்கி...
உறங்கியபடி விழித்து... 

பசித்தும் உணவருந்தாமல்
தவித்தபடி நான்..

நாளெல்லாம் பேசினாலும்
பாலையில் விழுந்த நீராய் மனம்..

நெருப்பிலிட்ட புழுவாய் மனம்
உன்னுடன் பேசா நேரத்தில்...

உறக்கத்திலும் உன் பெயரை உச்சரிக்கும் மனம்..

உன் அன்பான 
குறுஞ்செய்திக்கு 
பகலவனைக் பார்த்த சூர்யகாந்தியாய்
மனம்.

என் சிந்தை முழுவதையும் 
ஆட்கொண்டிருக்கும் 
நீ..

கல்லுக்கும் உயிர்கொடுத்து 
உணர்வு கொடுக்கும் 
வித்தை அறிந்தவன்.. 

இந்தப் பெண்ணை மட்டும்
கட்டையாக எண்ணுவது ஏனோ?

உன் அறிவுச்சுடரில் 
என் கண்கள் மட்டுமல்ல...
என் மனமும் செயலிழந்து 
மௌனம் சாதிக்க..

நீயோ என்னை... 
மௌன ஞானியாக சித்தரிக்கின்றாய்..
பூகம்பத்தில் நடுங்கும் பூமியைப்போல்
என் தேகமும் நடுங்குகிறது.,
உன் குரல் கேட்ட பரவசத்தில்...

தொலைவில் உள்ள உன்னைகூட 
அருகில் அமர்த்திப் பார்க்கிறது மனம்..

இப்படி...
யாதுமாய் என்னை வியாபித்திருக்கும்..
உன்னை அனுதினமும் பிரியாதிருக்க
மனம் விரும்பினாலும்...,
புத்தி எச்சரிக்கிறது.

புத்திக்கும், மனத்திற்கும் 
நடக்கும் போராட்டத்தில் 
பல நேரம் மனம் வெல்கிறது..
சிலநேரம் புத்தி வெல்கிறது..

புத்தியும் மனமும்... 
மாறி மாறி வென்று கொண்டு.,
என்னைக் கொல்லாமல் கொல்கிறது 
உன் நினைவு..

இப்படி கனவுலகில் வாழ்ந்து., 
நான் அருந்த நினைப்பது கானல் நீரோ??

கனவுலகில் வாழ்ந்து,
கானல் நீரைப்பருகி
தாகம் தீர்க்க நினைக்கிறேனோ நான்?


No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__