முகப்பு...

Monday 21 July 2014

#அறிந்தும் அறியாததும்..

யாரோ ஒருவரின் 
பொறுப்பற்ற செயலால் உண்டாகும் 
வீண் அலைச்சல், 
விரயமாகும் நேரம்..
வெட்டி செலவுகளுக்கு
நேரம் சரியில்லையென
தன் நேரத்தின்மீது பழிபோட்டு
அமைதிகொள்ளும் மனம்...
****
ஆயிரமாயிரம் பாடத்தையும், 
அனுபவத்தையும் 
அன்றாடம் காலம் கற்பித்தாலும்..

கற்பிக்கப்பட்டதை விடுத்து, 
மாயக்கண்ணாடியணிந்து 
விரும்பிய பக்கத்தையே படிக்கிறோம் 
வாழ்க்கைப்புத்தகத்திலிருந்து..
****
உண்மைகள் குறைந்த விலைக்கு வாங்கி அதிக நேரத்திற்கு விற்கப்படுமிடமாய் தொல்லைக்காட்சிகள்.
****
விரும்பியவைகளும், 
விரும்பியவர்களும் 
விலகிநின்று வேடிக்கை பார்க்கத்துவங்கும்போது,
விலகிநிற்கும் காலனை 
விரும்பியழைக்கும் மனம்...!
****

6 comments:

  1. தொல்லைக்காட்சிதான் நச்

    ReplyDelete
  2. வணக்கம்
    உண்மையான வரிகள்.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__