முகப்பு...

Friday 18 July 2014

மழலையர் உலகம்..


மழலைகள் தேவதைகள்தாம்
மறுக்கவில்லை..
அவர்கள் வாழும் உலகம்
தேவதைகளால் மட்டும் ஆனதல்ல..!
தேள்களும், தேனீக்களும்
மனிதநேயம் கொண்டவர்களும்,
மனநோயாளிகளும் கலந்துவாழும்
உலகமென்பதை மறக்கவேண்டாம்...!
நேர்மறையென்னும் 

கவிதை கூறியே
கற்பனையில் வளர்க்காது
எதிர்மறையும் இருக்குமென்ற
யதார்த்தம் கூறியே..
தேவதைகள் சாத்தான்களை
எதிர்கொள்ளும் மன சக்தியை
கொடுத்தே இயல்பாய் வளர்ப்போம்..!!

8 comments:

  1. தேவதைகள் சாத்தான்களை
    எதிர்கொள்ளும் மன சக்தியை
    கொடுத்தே இயல்பாய் வளர்ப்போம்..!
    >>
    இக்காலக்கட்டத்துக்கேற்ற வரிகள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சியும், நன்றியும். :) _/\_

      Delete
  2. சாத்தான்கள் நிறைய பெருகிவிட்டன! எனவே எதிர்கொள்ளும் மன துணிவை பழக்க வேண்டியது அவசியம்தான்!

    ReplyDelete
  3. உண்மையை அழகாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. முனைவரின் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி

      Delete
  4. தேவதைகளை வதைக்காமல்
    தேவதைகளாகவே வளர்ப்போம்...
    தேவைக்கேற்ப மாறாமல்
    தேர்ந்த வாழ்வை கற்றுக் கொடுப்போம்...

    அருமையான கவிதை அக்கா...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__