முகப்பு...

Saturday 20 April 2013

காதல் யுத்தம்...!!!

நித்தமும் யுத்தம் செய்கிறேன்..
இதய சிம்மாசனத்தில்
கம்பீரமாய் அமர்ந்து
எனை உறங்கவிடாத
உன் தோற்றத்துடன்...!!

செவியில் வீணையாய் ஒலிக்கும்
உந்தன் குரல்தவிர்த்து
ஏனைய குரலுக்கு
செவிடாய் இருக்கவிரும்பும்
என் செவியுடன்...!!

கண்மலரில் காதல் கசிய
எனை மயக்கும்
உந்தன் விழியினால்
உறக்கம் துறக்கும்
எந்தன் விழியுடன்...!!

சத்தமில்லாது முத்தமிட்டு
காதலில் மூழ்கச்செய்யும்
உந்தன் இதழுடன்...!!

சிலநேரம்
கண்ணா மூச்சியாடி
என் மனதை தவிக்கவைக்கும்
உன் மனதுடன்...!!

உன் மீதான கோபத்தில்
உணவைப் புறக்கணித்து
பசியுணர்த்தும் என் வயிற்றுடன்...!!

உன்மீதான காதலில்
உனையே நினைத்து நெக்குறுகி
எனை வலுவிழக்கச்செய்யும்
என் உணர்வுகளுடன்...!!

என் சிந்தையில்
நிரந்தரமாய் குடிகொண்டு
நித்தமும் தொடரும்
உந்தன் நினைவுடன்...!!

உன் வெற்றிக்கு
அஸ்திவாரமாய் அமைய
விரும்பித்தவிக்கும்
என் உள்ளத்துடன்...!!

உன் மகிழ்ச்சிக்கு
வித்திட்டு ஆணிவேராய்
அமைந்துவிடத்துடிக்கும்
என் இதயத்துடிப்புடன்...!!

என்காதல் உணர்ந்து
காதலுக்குக்
காதலை
காதலுடன் வழங்கும்
நின்காதலில் நெகிழும்
என் இதயத்துடன்...!!

சிலநேரம்
காதலை உணர்ந்தும் உணராதுபோல்
மௌனமொழி பேசும் உன் மனதுடன்...!!

உன்முன்னே
உயிரும் துச்சமென
உயிர்துறக்கத் துணியும் துணிச்சலுடன்..
உனக்கானவள்
உனக்காக
உணர்வுகளுடன்
உணர்வோடு நித்தமும்
புரிகிறேன் காதல்யுத்தம்...!!



8 comments:

  1. மனம் கவர்ந்த அருமையான கவிதை
    சொல்லிச் சென்றவிதம் மிக மிக அருமை
    யுத்தம் தொடரட்டும்
    படிப்பவர் சித்தம் குளிரட்டும்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழர்...நீண்ட நாட்களுக்குப்பிறகு தங்களின் வருகை..நன்றி..:)

      Delete
  2. உணர்வுள்ள வரிகள்... புரிகிறது...

    ReplyDelete
    Replies
    1. நன்றியும் மகிழ்ச்சியும் சகோ..:)

      Delete
  3. உன் மகிழ்ச்சிக்கு
    வித்திட்டு ஆணிவேராய்
    அமைந்துவிடத்துடிக்கும்
    என் இதயத்துடிப்புடன்...!!


    கண்டேன் உங்கள் காதல் யுத்தம்
    கண்களில் வருதே கனவின் சத்தம்
    விண்ணிடை புகுந்த எந்தன் ஆன்மா
    மீழ்புக வருதே உடலைத்தேடி ...!

    மிக அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழர்..தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றியும் மகிழ்ச்சியும்.._/\_

      Delete
  4. VERTIKKU VITHIDDAVAL VERTIKANI THANTHAVAL VIRUMBA MANAM THANTHAVAL VINNAIMUDDA VIDAITHANTHAVAL ...
    MAUNAM MOLIPESUM....MARAVATHU UNNESAM...
    KAVITHAIN KATHALAN.

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__