முகப்பு...

Thursday 11 April 2013

உள்ளச் சிதறல்...

உனையேப்படிக்கிறேன் நிதமும்
உன் நினைவினில் மூழ்கி
உன்னில் கரைந்து மறைவதை
உணர்கிறேன்..

உணர்ந்ததை..
கவியாய் வடிக்கத்
தோற்றுப்போகிறேன்..

எண்ணத்தில் இருப்பவன்
எழுத்தினில் வரமறுக்க

கவிசமைக்கும் முயற்சி
காற்றோடு கலக்கிறது..
வார்த்தையில் அடங்காதவனை
வர்ணிப்பதெங்கனம்..?!!

6 comments:

  1. அதானே...! முடியுமா அது...?

    ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. உணர்வுக்கு வார்த்தைகள் அடிபணிந்து
    தங்களுக்கு சேவை செய்வதை கவிதைகள்
    உணர்த்துகின்றன.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. தங்கள் படைப்புகள் அனைத்தும் மிகச்
    சிறப்பாக உள்ளன,முழுவதும் படித்துவிட ஆசை
    இவ்வாரத்தில் படித்துவிட உத்தேசம்
    தொடர வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி தோழர்..தங்களின் ஊக்கமான கருத்துக்கள் எமது எழுத்துக்களை செம்மை படுத்தட்டும்..நன்றி

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__