முகப்பு...

Thursday 25 April 2013

மனச்சிதறல்...



அன்பாக நடிப்பதை விடுத்து
அன்பாகப் பழக
அன்பின் ஆழம் புரியும்..

உழைப்பாளியாய் நடிக்காமல்
உண்மையாய் உழைக்க
வியர்வையின் மணம் புரியும்..!

நேர்மையானவனாய் நடிப்பதைவிட
நேர்மையானவனாய் நடக்க
நேர்மையின் வலிமை புரியும்.

காதலிப்பதாய் ஏமாற்றாமல்
காதலுடன்
காதலை உணர்ந்து காதலிக்க
காதலின் சுகம் புரியும்..!!

தேசப்பற்றுடையவனாய்
தோற்றமளிக்காமல்
தேசத்தின்மீது பற்றுவைக்க
தேசம் வளர்ச்சியடையும்..

*****

8 comments:

  1. புரியும் வரிகள் அனைத்தும் அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தமிழ்மணம் (+1) இணைத்தாகி விட்டது... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. :):) நன்றியும், மகிழ்ச்சியும் சகோ.

      Delete
  3. மிகச் சரி
    நடிப்பதை விட இயல்பாய் இருப்பது
    வெகு எளிதென விளக்கிப்போகும் கவிதை
    மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. மனச்சிதறலே மகிழ்ச்சியான கவிதையாகுகிறது,அருமை

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__