முகப்பு...

Tuesday 23 April 2013

எழுத்து...!!

எண்ணத்தில் தோன்றுவதை
எதிரே காண்பதை
எடுத்துரைக்கப்பட்டதை
பந்தங்களால் பகிரப்பட்டதை
தோழமைகளின் தோல்விகள் - துயரங்கள்
அன்பானவர்களின் அன்பு
ஆசையுடையோர்களின் பேராசை
தன்னக்காரர்களின் சுயநலச்சிந்தனை
மோசக்காரர்களின் மோசடிகள்
காதல்..
காமம்..
துக்கம்
மகிழ்ச்சி
கண்ணீர்..
எழுச்சி,
தன்னம்பிக்கை
தத்துவம்..
வெற்றி
தோல்வி..
ஏமாற்றம்..
மரணம்
என அனைத்தையும்
அறிந்ததையும், உணர்ந்ததையும்,
பார்த்ததையும், கேட்டதையும்...
பதிவாய் இங்குப்பகிர..
அனைத்தும் எழுத்தாளனுக்கு ஏற்பட்டதோ..??!!
கற்பனையில் மூழ்காது..

எழுத்தை எழுத்தாய்க் கண்டு
குறையிருப்பின் எடுத்துரைத்து
நிறையிருப்பின் ஊக்குவிப்போம்
நிரந்தர எழுத்தாளனாய் வலம் வர
நித்தமும் உதவிடுவோம்..:)

10 comments:

  1. அருமை... நல்லெண்ண எழுத்துகளாக என்றென்றும் இந்த நட்பு தொடரும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தமிழ்மணம் (+1) இணைத்து விட்டேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சியும் நன்றியும் சகோ.

      Delete
  3. அருமையான கருத்து பகிர்வு
    நிச்சயம் தொடர்ந்து வருவோம்
    கரும்பு தின்னக் கூலியா வேண்டும்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__