முகப்பு...

Wednesday 20 February 2013

வாழ்க்கை...!!!


கண்களை விற்று 
சித்திரம் வாங்கி 
கொள்ளையழகை
கண்டுகளிக்க விரும்பி
வாழ்க்கைப்பயணத்தைத் தொடரும்
சிற்றறிவு படைத்தோரை
எள்ளி நகைப்பதா..??
இரங்குவதா..?
எட்டிநின்று வேடிக்கை பார்ப்பதா..?
கரம்பிடித்து கண்களாய் விளங்குவதா..?
செய்வதறியாது செல்கிறது நாட்கள்..!!

         **********
வாழ்க்கைத்தோட்டத்தில்
காலம் விளையாடும்
கண்ணாமூச்சியில்..
மொழியறியாத ஊரில்
தனித்து விடப்பட்ட
கண் தெரியாதவனாய்
காலத்திடம் பிடிபட்டு
ஆட்டத்தையிழக்கும் அந்த நேரமும்
வந்துசெல்லும் அவ்வப்பொழுது..


4 comments:

  1. அழகை ரசிக்க வழியில்லாதவனுக்கு கண்கள் எதற்கு என்று எண்ணியிருப்பார்களோ...

    வாழ்க்கை ரொம்பக் கஷ்டமானது

    ReplyDelete
    Replies
    1. வாழ்க்கை கஷ்டமானதோடு விசித்திரமானதும் கூட தோழர்..வருகைக்கு நன்றி..

      Delete
  2. சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__