முகப்பு...

Monday 24 December 2012

உணர்வின் சிதறல்கள்...


விளையாட்டாய் நீ புகட்டிய
விசவார்த்தைகளை
விழுங்கி ஜீரணிக்க எத்தனிக்கிறேன்..
விழுங்கமும் முடியாமல்
துப்பவும் விரும்பாமல்
துவள்கிறேன்...
ஊட்டியது நீயென்பதால்...!!!

----------
வருத்தமும், கோபமும் கூடிப்பேசி 
ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது 
உண்ணாவிரதம் இருப்பதென...
-----------

8 comments:

  1. விஷமென அறியாது பல சமயம்
    விளையாட்டாக வேண்டிய பலர்
    ஊட்டித்தான் விட்டுவிடுகிறார்கள்\
    சுருக்கமான ஆயினும் அருமையான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்து எம்மை வளப்படுத்தட்டும்..நன்றி..:)

      Delete
  2. அக்கா...

    கவிதைகள் இரண்டும் அழகு...
    அருமையான எழுதுறீங்க...

    //வருத்தமும், கோபமும் கூடிப்பேசி
    ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது
    உண்ணாவிரதம் இருப்பதென...//

    ஆமா இது எத்தனை நாள் உண்ணாவிரதம் அக்கா....

    ReplyDelete
    Replies
    1. நன்றி தம்பி....//ஆமா இது எத்தனை நாள் உண்ணாவிரதம் அக்கா....// ஹஹ்ஹா

      Delete
  3. சில சமயங்களில் வார்த்தைகள் மட்டுமல்ல...

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__