முகப்பு...

Tuesday 28 February 2012

நந்தவனப்பூக்கள்..!!

நந்தவனமாய் இறைகொடுத்த இப்பிறவி..!!
நறுமணம் வீசும் வாழ்வில்..
வண்ண மலர்கள் பூத்துக் குலுங்க..
கண்ணைக் கவரும் கனகாம்பரம்..

மந்தகாசத்தைத்தூண்டும்
மல்லிகை, மரிக்கொழுந்து......

வெண்மேகமாய் காட்சியளிக்கும்
நந்தியாவட்டை...
வெண்மையும், இளஞ்சிவப்புமாய்

பூமித்தாய்க்கு புகழாரம்
சூட்டியபடி பவழமல்லி...

சந்தன முல்லை, சாதிமல்லி..
வெண்மை, நீல சங்குப் பூவென..

வண்ண,வண்ண பூக்கள்
வரிசையாய் வீற்றிருக்க...

ஒய்யாரமாய் வீற்றிருக்கும்
பூவையவளின் கார்குழலை
அழகூட்டும் ரோசா..
மணமூட்டியபடி மல்லி...

ஈசனின் திருவடி சேர்ந்த

செம்பருத்தி..., செவ்வரளி...

குடும்பத்தைக் கண்ணீரில்
ஆழ்த்திச் சென்றவனின் கல்லறையில்
அலங்கரிக்கும் கல்லறைப் பூக்கள்...

அழகாய் காட்சியளித்து..
நறுமணத்தால் சுண்டியிழுத்து....

எதையும் அலங்கரிக்க முடியா சோகத்தில்
சந்தன முல்லையும், சாதிமல்லியும்
உதிர்ந்து கிடக்க......
கூந்தலில் குடியேறுவதா..??
இறையடி சேர்வதா..??
இல்லத்தையும்,
கல்லறையையும் அலங்கரிப்பதா..??
உபயோகமற்று உதிர்ந்து போவதா....??

இறையையும்,இயற்கையையும்
அறிவதெப்போது...?? அறிவதெங்ஙனம்..?? 





No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__