முகப்பு...

Sunday 26 February 2012

மௌனமாய்.....!!!!

உறங்கா விழியும்
உனை நோக்க...

செவியில் ஒலிக்கும் உந்தன் குரல்
சிந்தையைத் தூண்ட..

நடுநிசியும் நண்பகலாக
குழம்பி யருந்தியபடி குழம்ப....

விழித்தபடி கண்ட கனவு
உறங்காமல் தடுக்க..

உறங்கியபடி விழித்து
விழித்தபடி உறங்கி....

உறங்கியது போதுமென
உணர்வு விழிக்க
விழியும்  உறக்கம் துறக்க...

விழித்தபடி உறங்கியது தவறா..??
உறக்கத்தில் விழித்தது தவறா..??
உணர்த்துவது எதை..??
உணரவேண்டியது எதை..??

உறங்கியது சத்தியமா...?
விழிப்பது சாத்தியமா..??

நீயும்
மௌனமாய், மௌனத்தை உணர்த்த...
நானும்
மௌனத்தை விரும்பியே மௌனமாய்
மௌனத்தை மௌனிக்க
மௌனத்தைக் கையிலெடுக்கிறேன்.....!!!!















No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__