முகப்பு...

Tuesday 20 December 2011

இரு துருவம்.......!!!

சேர முடியா இரு துருவம்
சேர நினைக்குது,
கற்பனையில் மிதக்குது..

கானல் நீரருந்த நினைக்கும் மனம்.,
இறந்தவனை மறக்க முடியாமல்.,
ஏங்கும்
மங்கையின் உள்ளம்..

தாகத்திற்குதவாத சமுத்திரமாய்...
காதலித்தவனின் நினைவுடன்
அவள்.....!!

இணைய முடியா இரு துருவத்தை
இணைக்க.,
இங்கேயும், அங்கேயுமாய்
அல்லாடுகிறது காதல்...

இறந்தவனுடன் இணைவதும்
சாத்தியமா...??!!

அறிந்தும் கனவுலகில் வாழ்ந்து.,
அவன் காலடித் தடம் தொடர்ந்து.,
அவனையடைந்தவளை....

இழந்த சோகத்தில்
பூமித்தாய் வடித்த கண்ணீர் சுனாமியாய்..

மரங்களும் தன் பசுமையிழந்து.,
சொல்லொனா சோகத்தை சொல்கிறது.

அவள் காதலையெண்ணி
அழுதுசிவந்த வானம்...
வெண்முகில் வேடிக்கைப் பார்க்க.,
இடியோ..முழக்கமிட்டு
அவளை வரவேற்கிறது...

அவனோ.,
இறந்தும் சுமக்கிறான் அவளை....!!!






2 comments:

  1. காதல் தாகத்தை கானல் நீர் போக்குமா...???

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__