முகப்பு...

Saturday 24 December 2011

பிரியமானவனே....




பிரியமானவனே..
மனம் படித்தவளின்.
,
மனம் படிக்கத் தவறியதேனோ...??

ஒற்றைச் சொல்லில் உலகம் அளந்தவளை
மௌனத்தால் மரணிக்கச் செய்தாயே...!!

ஆன்ம சினேகம் கொண்ட நம்முள்
அறிமுகம் ஏதும் தேவைதானோ...!!??

நம்பிக்கையின் நட்சத்திரம்,
பேரன்பின் சூட்சுமம்.
உன் மனதின் பிம்பமாய்
உனக்கு விளங்கிய நான்.,
செருக்கடைந்து...

உனைப் படித்த மகிழ்வில்...
உன்வயப்பட்டு என்வயம் இழந்த.,
என் மனதைப் படிக்கும் மொழியறியாயோ நீ...??
எரிமலையாய்க் குமுறும்
என் மனமும் குளிர்வதெப்போது...?

நம்பிக்கைக்குரியவன்.,
நம்பிக்கையானவளிடம்..
நம்பிக்கையற்று..
நடக்கும் அதிசயம் அரங்கேற...
அங்கென் இதயமும் வெடித்துச்சிதற..     

விளங்காத புதிராய் நீ...!!
விடையறியாமல் நான்....??

மனம் படித்தவளும் மனம் குழம்பும்..
அதிசயம்..
உனையறிய முடியா அந்த சில நிமிடங்கள்....!!!
               







5 comments:

  1. Akka nanum vanthuten..
    unka post Very nice..

    ReplyDelete
  2. @சிராஜூதீன்...வா தம்பி..ரொம்ப மகிழ்ச்சிப்பா...நன்றி..

    ReplyDelete
  3. மிகவும் நன்றாக இருக்கிறது.. உண்மையிலேயே உணர்ச்சியுடன் அனுபவிதத்தை போலே..அப்படி ஏதும் இருக்ககூடாது என்று நினைகின்றேன்

    ReplyDelete
  4. @ஸ்டாலின், வாங்க தோழரே..மிக்க நன்றி தங்கள் பின்னூட்டத்திற்கு...

    ReplyDelete
  5. மனதை உலுக்கும் வரிகள்.... அக்கா

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__