முகப்பு...

Tuesday 20 December 2011

குருவிக்கூடு........

என் உள்ளம் கவர்ந்தவனை.,
மனம் சிட்டுக்குருவியாய் சிறகடித்து
அவன் கூட்டில் தஞ்சமடைய....

அவனை சிட்டுக்கள் பல வட்டமிட..,

தஞ்சமடைந்தது கூட்டிலா..??
பறவைகள் வந்து செல்லும் வேடந்தாங்களிலா...?

கூட்டில் இருப்பதா..

இல்லை பறப்பதா...??!!!
சிட்டுக்குருவி சித்தம் தடுமாற.....,
வேடந்தாங்கலில் தஞ்சமடைய.,
வந்து செல்லும்
பறவையில்லையே நான்...??

ஒரு மரத்தில் வீடமைத்த
குருவிக்கு..
வேடந்தாங்கலில் வீடமைப்பதும் சாத்தியமா..?

தஞ்சமடைந்தது குருவிக்கூட்டிலா...?
தேன்கூட்டிலா...??

குருவியின் குரல் கேட்ட எனக்கு..
தேனீக்களின் ரீங்காரம்...

என் கூட்டில் தஞ்சமடைய
எவரிடம் கேட்க அனுமதி...?

கூட்டிடமா...?
வந்து செல்லும் பறவைகளிடமா..??




2 comments:

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__