முகப்பு...

Wednesday 5 March 2014

அறிந்தும் அறியாமல் சிதறியது..:)

கண்களை விற்று சித்திரம் வாங்கி இரசிக்க முடியாததைப்போல் வாழ்வதற்காக ஓடும் நேரத்தில் வாழ்க்கையை தொலைத்து வாழ்கிறோம்...
**
அறிந்தே முட்டாளாவது, குழந்தையிடத்தும், அன்புடையவர்களிடத்தும்..:)
**
காயப்படுத்தக்கூடாது என உறுதியெடுக்கும் அந்த நிமிடமே மற்றுமோர் ஆயுதம் கூர்தீட்டப்பட்டு நம்மையறியாமலேயே கையிலெடுக்கப்படுகிறது மௌனமாகவோ, வார்த்தையாகவோ ..

**
”ஒன்றுமில்லை” என்ற ஒற்றை வார்த்தையில் மறைத்து வைக்கப் பட்டிருக்கும் வெறுப்பு, கோபம், பொறாமை, வெளிக்காட்டப்படாத அன்பு, மருந்திடப்படாத உடை(த்து)ந்து நொறுக்கப்பட்ட மனம் மறைந்திருக்கலாம்.. :)
**
ஆறிய காயத்தின் வடுக்களை காண சகிக்காமல், காயம் உண்டாக்கியவர்களால் மீண்டும் கீறப்பட்டு இரத்தத்தால் அழகுபடுத்தப்படலாம் :)
**
இன்று எங்கோ யாருக்கோ ஏற்படும் ஏதோ ஒரு நிகழ்வு, என்றோ ஏற்(படுத்தப்)பட்ட காயத்தின் வடுக்களை கீறி இரத்தம் கசியச் செய்யலாம்..
**

11 comments:

  1. சிதறிய சிந்தனைத் துளிகள்
    முத்துக்களாய்....
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வரவிற்கும், வாழ்த்திற்கும் நன்றி..:)

      Delete
  2. சிந்தனைத்துளிகள் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  3. சிந்தனையில் சிதறிய துளிகள் மிக நன்று.

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழர்..மிக்க மகிழ்ச்சி..:)

      Delete
  4. Replies
    1. ஐயாவின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.._/\_

      Delete
  5. அன்பின் இனிய புத்தாண்டு
    நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே..தங்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். :)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__