முகப்பு...

Saturday 29 June 2013

உணர்வுச்சிதறல்..

உணர்த்தவேண்டியதை
உணர்த்தவேண்டியவர்
உணரவைக்கத்தவறும்போது…;

உணரவேண்டியவர்
உணரவேண்டியதை உணரத்தவறுவதாக
உணர்த்தவேண்டியவர் உணர..

உணரவேண்டிவர் உணராது
உணர்த்தப்படவேண்டுமெனவும்..
உணர்த்தவேண்டியவர்
உணர்த்தாது
உணரவேண்டுமெனவும்
உணர்வதும், உணர்த்தப்படுவதும்
உணராமலும், உணர்த்தப்படாமலும்

உணர்வு
உணர்வதற்காகவும்,
உணர்த்தப்படுவதற்காகவும்
காத்திருக்கிறது...!!

10 comments:

  1. நன்றாகவே உணர வைத்து விட்டீர்கள்...(வித்தியாசமாக) வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ...:) தங்களின் தொடர்ந்த ஊக்கம் எமது தூரிகையில் சிதறல்களை வழங்கட்டும்...:)

      Delete
  2. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. _/\_ மகிழ்ச்சியும், நன்றியும்..

      Delete
  3. அக்கா...
    உணர்த்த நினைத்ததை
    அருமையாக உணர்த்தி விட்டீர்கள்...
    உணர வேண்டியதை
    நாங்களும் உணர்ந்துவிட்டோமென
    உணர்வுப் பூர்வமகாக
    உணர்த்துக்கிறோம்...

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா....:) உணர்வுப்பூர்வமான நன்றி..:)

      Delete
  4. உணர்ந்து கொண்டேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. UNARVUKAL ULLATHIN MOZHI .....ULLATHAL MADDUME UNARA EYALUM...VARTHAIKAL ANKE VALUVILANTHU SELLUM.....VASNTHA KALAMA...VALLKAI ....? VALTHUKKAL.....

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__