முகப்பு...

Saturday 23 June 2012

அருவம்...



எண்ணத்தை எழுத்தாக்கி
எழுத்துக்கு உயிரூட்ட யெத்தனிக்க..

எண்ணமெலாம் ஆட்கொண்டிருக்கும் உனை
எழுத்தில் வடிப்பதும் இயலுமா...?!!!


சொற்களில் அடங்காச் சித்திரமே..
பிரபஞ்சத்தை இயக்கும் பேராற்றலே..!!
எதுகையும், மோனையும்
உனை
ஏட்டுக்குள் அடக்கிடுமா..??

உணர்வால் உணர்ந்து

உணர்வால் உணர்த்தவேண்டிய உனை
உவமான, உவமேயத்தில்
உருவகப்படுத்தத்தான்  முடியுமா..??

அருவமான உனை

உருவத்தில் கண்டு அகமகிழ
அனைத்திலும் அனைத்துமாகி 
என்னகத்தே  குடிகொண்டவன்
எனை 
உன்னகத்தே அழைப்பதெப்போது..??

2 comments:

  1. அக்கா.. அருமையான கவிதை... முகப்புத்தகத்தில் இதற்கான கருத்தைச் சொல்லியிருக்கிறேன்.

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__