முகப்பு...

Sunday 24 June 2012

தவம்....



காலையில் பிறந்து,
வண்ணமயமாய் பூத்துக்குலுங்கி..
கண்களுக்கு அழகூட்டி
மணம் வீசி
மனம் கவர்ந்து
மாலையில் மரித்து .
அனைவரையும் மனம் வாடச்செய்து...



ஒரே நாளில் ஜனித்து, மரணிக்கும்
மலரின் ஒருநாள் பிறப்பை நோக்கி
தவமிருக்கும் செடியாய்...

வனியில்
சை தவிர்த்து
ன்சொல் பேசி
கை செய்து
ண்மையுணர்ந்து
க்கம் குன்றாமல்
ண்ணத்தில் திண்ணமாய்
இறைகாணும் க்கமுடன்
ம்புலனடக்கி.
ருமித்து
ம்காரம் உரைத்து...
வியம் பேசாதிருந்து..

அஞ்ஞானம் துறந்து..
மெய்ஞ்ஞானம் உணர தவமிருக்கும்
எனை எனக்கு உணர வைத்து
ஆட்கொள்வாயோ...?

2 comments:

  1. அவனியில்
    ஆசை தவிர்த்து
    இன்சொல் பேசி
    ஈகை செய்து
    உண்மையுணர்ந்து
    ஊக்கம் குன்றாமல்
    எண்ணத்தில் திண்ணமாய்
    இறைகாணும் ஏக்கமுடன்
    ஐம்புலனடக்கி.
    ஒருமித்து
    ஓம்காரம் உரைத்து...
    ஔவியம் பேசாதிருந்து..

    அருமை... அருமை அக்கா.
    கலக்கிட்டீங்க போங்க...

    ReplyDelete
  2. :):) தம்பியின் தொடர்ந்த ஊக்கமான பின்னூட்டத்திற்கு நன்றி.

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__