முகப்பு...

Saturday 5 May 2012

காகித ஓடம்...!!!



மனதில் மேடையமைத்து
மணமேடையேற மறுத்தாய்..!!

உள்ளத்தால் இணைந்து
உறவால் பிரிந்து
உள்ளத்தில் வந்து, சென்று
எனைக் கொள்ளாமல்
கொல்வதேனோ...??

அகத்தில் இருந்த எனை
புறம் தள்ளி..
அந்தஸ்துடையவனை
அகமுடையவனாக்கி
எனை அந்நியனாக்கினாய்...

காகித ஓடமாய்
நீ  கொண்ட காதலுமே
கரைசேராமல் காணாமல் போனதே...!!

அகமிருந்தவளை..,
அகமுடையவனோடு
சந்திக்க..
விதியின் விளையாட்டை
வினோதமாய்க் காண்கிறேன் நானும்...!!!

செடியேறா பறித்த மலராய்
நம் காதல் நினைவுகளால்
அனு, அனுவாய்
சித்திரவதையனுபவிக்க...

மனதையாண்ட
மங்கையின் மனம்
மனதை வருட...
மரணத்தை நாடச்செய்யுதே
மனமுமே...!!

மணமேடை துறந்த மங்கையவளுக்காய்
மரணத்தை நாடியே..
மசக்கையுற்று ஐயிரு மாதங்கள்
எனைச் சுமந்த அன்னையை
ஆயுளுக்கும் அவதிக்குள்ளாக்கவும் வேண்டுமா...??

அன்னையின் அன்பினில்
அகிலமே இயங்க..
அன்பு மகனின் துக்கமா
தூள் தூளாகிப்போகாது.....????!!!!


2 comments:

  1. கவிதை அருமை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__