முகப்பு...

Wednesday 2 May 2012

நிலவில்லா பவுர்ணமி...


விஞ்ஞானிகளையும்
வியக்க வைத்த
என்னவளே..!!

நீயில்லா
இப்பாரினிலே..
நிலவும் மறைந்து
நிரந்தரமாய் அமாவாசை
ஆகாயத்தில் ஆட்சிபிடிக்க....!!

பௌர்ணமி தொலைத்த
ஆகாயமோ
காலனை நிந்திக்க...
செய்வதறியாக் காலனும்...
கரம் கூப்பி உனை திருப்பியனுப்ப...

உலகம் காணா விந்தையாய்..
உள்ளத்தில் குடிகொண்ட
சொர்க்கத்தை சுற்றிப்பார்த்த சுந்தரி
இல்லாளாய் இல்லத்துள் புகுந்து
சொர்க்கத்தை கொடுத்தாளே..!!

கதிரவன் வந்தவழியே
வருணனும் வந்திறங்கி
கனவில் கண்ட சொர்க்கத்தைக்
காணாமல் செய்தானே.....!!!

No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__