முகப்பு...

Sunday 8 April 2012

புன்னகை.....



பொன்னகை வெறுத்து...
வினவா வினாக்களையும்.,
விரக்தியையும்.,
ஐயத்தையும்..
மனிதர்களிடம் கிட்டா மனிதத்தையும்..
விடத்தையும் தேனாய் கொடுக்கும்
மனிதர்களையும்..


ம(றை)றக்கத் தறித்த பூவையின் புன்னகையே
புதிராய் விளங்கி வினாயெழுப்ப...

ஒற்றைப் புன்னகையில் மறைந்திருக்கும்
உண்மைகளை விளக்கமுடியாப்
பாவை யவளோ..!!!
புன்னகையையும் தவிர்த்துப் பயணிக்க
எத்தனிக்கிறாள்....
புதியதோர் பாதையில்....!!!          


***************************************************************

விளக்கு....



உன்மீதான காதலில்...
இதயத்தை அகலாக்கி...
கண்ணீரை எண்ணெய் ஆக்கி...
நினைவுகளைத் திரியாக்கி....
உடம்பை எரித்துக்கொண்டிருக்கிறேன்...
உன் மனமென்னும் வெளிச்சத்திற்காக...!!


**************************************************************************


2 comments:

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__