முகப்பு...

Monday 16 April 2012

வசந்தத்தை நோக்கி....!!



சூரியனும் எனை சுட்டெரிக்க..
வருணனும் வஞ்சிக்கிறான்..

பசிக்கு வறண்ட மார்பை நோக்கும்
குழந்தையாய்..



வறண்ட நாவுடன்
பூமித்தாயின் வெடித்த இதயத்தை
நோக்கியபடியே நானும்.....!!
நிற்கயியலா நடுக்கமுடன்
துவண்ட எனை சாய்க்க
தோள் தேட.....

படைத்தவனும்
பாராமுகம் காட்ட..
வளர்ப்பவனோ வாஞ்சையற்றுப்போக..

ஒரு துளி நீரில் உயிர் பெறவே
நானும் ஓயாமல் காத்திருக்க...
உயிர்கொடுக்கும் நீரையுமே
விரயமாக்கும் வினோதமிங்கே....!!!

வருங்கால சந்ததிக்கே
வண்ணமலரும்..
கனியுங் கொடுத்து
வசந்தத்தை அளித்திடவே
விரும்பிய என் கனவும்
விருப்பமின்றிக் கருகியதே...!!

வாடிய எனக்கு வாழ்வளிக்க
வள்ளலாரும் வரவேண்டுமோ..??


No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__