முகப்பு...

Monday 11 July 2011

ஏக்கம்.....???


விட்டுகொடுப்பதுதான்
வாழ்க்கை என்றார்கள்!
விட்டுக்கொடுத்தேன்!!

என் பிறந்தவீட்டை,
என் நண்பர்களை,
என் சிறுபிள்ளைதனத்தை,
என் உயர்கல்வியை,
என் வளர்ச்சியை,

என் தனிப்பட்ட
விருப்பு-வெறுப்புக்களை,
என் எதிபார்ப்பை,
என் உணர்வை,

என் வாழ்நாள் முழுவதும்,
உன்விருப்பத்திற்கிணங்கி
என் விருப்பங்கள் யாவையும்
தியாகம் செய்த என் இறுதி மூச்சும் 
உனக்கு முன்பாகவே
நின்றுவிட ......
பெண்ணான
எனக்கு இறுதியில் மிஞ்சியது
"சுமங்கலி "
என்கிற வார்தை மட்டுமே.
இதில் எங்கே என் வாழ்க்கை ???
பெண்ணாக வாழ்ந்தேனே தவிர
என் விருப்பப்படி வாழவில்லையே!
என்கிற ஏக்கத்தோடே செல்லும்
என் உடல்.
..........பெண் .........




4 comments:

  1. பெண்ணின் உணர்வுகள் ஒவ்வொன்றாய் சுரம் பிரித்துள்ளீர்கள், உண்மையும் அதுவாகத் தானே உள்ளது மறுக்க முடியுமா என்ன?

    ReplyDelete
  2. தரம் கெட்ட மனிதர்கள் அடைத்து வைத்த வேலியில் முடக்கி வைக்கப்பட்டப் பெண்.

    ReplyDelete
  3. மறுக்கமுடியாத உண்மையும் பல நேரங்களில் மறைக்கப் படுகின்றன பாலா..

    ReplyDelete
  4. பெண்கள் இனியாவது வேலியை பிய்த்து எறிந்து வெளியே வருவார்கள் என நம்புவோம்..தம்பி.

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__