முகப்பு...

Monday 4 August 2014

அறிந்தும், அறியாமலும்..

பசிக்கு பழைய சோறுகூட போடாது, அடுத்தவார விருந்தில்  கலந்துகொள் என்பதுபோல் தேவைப்படும் நேரத்தில் அன்பை வழங்காது, நாம் ஓய்வாக இருக்கும் நேரத்தில் அன்பு பகிரப்படுகிறது(தோ).
*****
அம்மையப்பனும், ஆசானும் கற்றுக்கொடுக்காத 
பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் காலம் கற்றுக்கொடுக்கும்.
*****
சிறிய பொய்தானேவென
நாளுக்கொரு பொய்யினால் அமைக்கப்படும் 
உறவுப்பாலத்தில்...
மெல்லியதாய் விழு(ம்)ந்த பொய்த்திரை
நாளுக்கு நாள் அடர்வு கூடி 
உணர்வுகள் பகிரத் தடையாகி
உறவுப்பாலத்தில் 
விரிசல் உண்டா(க்)குமென்பதை 
உணருவதில்லை..
****
வலித்தோட்டத்தில், விழிநீரூற்றி வளர்க்கப்படும்  செடியில் மலரும் புன்னகைப்பூக்கள் மணம் வீசுவதில்லை.
****

10 comments:

  1. //பசிக்கு பழைய சோறு கூட போடாது, அடுத்த வார விருந்தில் கலந்து கொள் என்பது போல் - தேவைப்படும் நேரத்தில் அன்பை வழங்காது, நாம் ஓய்வாக இருக்கும் நேரத்தில் அன்பு பகிரப் படுகிறதோ//

    நியாயமான சிந்தனை.. வாழ்க நலம்..

    ReplyDelete
  2. அனைத்து சிந்தனைகளும் அருமை! தேவையின் போது உதவ வேண்டும் என்பது சிறப்பு!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் சகோ.

      Delete
  3. வணக்கம்
    அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றியும், மகிழ்ச்சியும் சகோ.. அவசியம் பார்வையிடுகிறேன்..:) தகவலுக்கு நன்றி

      Delete
  4. அனைத்து கருத்துகளும் மிக மிக அருமை.....எந்த கருத்தை பாராட்டுவது விட்டுவிடுவது என்பது தெரியாவில்லை எல்லாமே மிக அருமையான கருத்துக்கள். சிந்திக்க வைக்கும் கருத்துக்கள். சபாஷ்!!!!!!பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்.

      Delete
  5. இது வெளியிடுவதற்காக அல்ல.......... உங்களின் இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது இதை என் தளத்தில் உங்களின் பெயருடன் மறுபதிப்பாக வெளியிட அனுமதி கிடைக்குமா?
    முடிந்தால் இமெயில் செய்யுங்கள் avargal_unmaigal@யாகூ.காம் அல்லது எனது தளத்தில் கருத்தாக சொல்லுங்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி... எம் பதிவுகள் ஏதோ ஒரு வகையில் பிறருக்குப்பயன்படும் வகையில் உள்ளதென தோழமைகள் கருதும் பதிவுகளை பகிர்வதற்கு எம் அனுமதி தேவையில்லை. பகிர்ந்துகொள்ளுங்கள்.

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__