முகப்பு...

Thursday 19 June 2014

அறிந்தும் அறியாமலும்...

காயம் ஏற்படுத்தியவரால் கூடசில பல காயங்கள் ஆற்றப்படா(முடியா)மல் புரையோடிவிடுகின்றன..
****
தன்னை விரும்பாத வீட்டிற்கு
அழையா விருந்தாளியாய் செல்லும்
மரணம்..
விரும்பியழைப்பவரை
அலட்சியப்படுத்தி
ஏமாற்றத்தைப்பரிச்சாய் வழங்குகிறது(தே)..!
**********
கானல் நீரருந்தி தாகம் தணிப்பதுபோல்
வேடமணிந்த அன்பிலும்
ஆறுதல்கொள்கிறது (பலரது) மனம்..

4 comments:

  1. அருமையான கருத்துக்கள்! சிறப்பான படைப்பு!

    ReplyDelete
  2. மரணம் பற்றிய கவிதை மனதைத் தொட்டது.... கேட்டுப் பெற முடியாத விஷயமாயிற்றே மரணம்....

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__