முகப்பு...

Sunday 25 November 2012

சிதறியவை...

எவரும் வரவிரும்பா
என் வீட்டில்
அழையா விருந்தாளியாய்
ஏழ்மையும், மழையும்..

விரும்பிய படிப்பை

தொடரத் தடைவிதிக்கும்
விரும்பா நேரத்து மழை..

எரியும்விளக்கை அணைக்க
எத்தனை ஆர்வமாய்
எட்டிப்பார்க்கிறது
என் வீட்டிற்குள்..??
*****
அன்புக்காற்றில்
இதயகோபுரத்தின் உச்சத்தில் 
சிலநாளும்
அலட்சியக்காற்றில்
குப்பையில் சிலநாளும் 
வீசப்படுகிறது
மனிதனின் மனம்...
*****

8 comments:

  1. பல வீடுகளை இந்த நிலைமை தான்...

    *****

    மனித மனத்திற்கு மதிப்பே இல்லை... எல்லாம் பணம் தான்...
    tm2

    ReplyDelete
  2. எவரும் வரவிரும்பா
    என் வீட்டில்
    அழையா விருந்தாளியாய்
    ஏழ்மையும், மழையும்..

    அருமையான தொடக்க வரிகள். முடிவில் ஏனோ மொட்டைத்தட்டுகிறது. எனது புரிதல் அப்படியாக இருக்கலாம். இருந்தாலும் ரசிக்க வைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. தோழமையின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி. சுட்டியமைக்கு நன்றி..சரிபார்க்கிறேன்...:)

      Delete
  3. நல்ல கவிதையம்மா..பிடித்தது..

    ReplyDelete
    Replies
    1. தோழமையின் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி..

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__