முகப்பு...

Tuesday 20 November 2012

ஓவியக்கவிஞன்..





வர்ணங்களால்
எண்ணங்களைத் தீட்டி
வார்த்தையில்லா காவியம் படைத்து
கவிதையெழுதத் தூண்டி
கவிஞனை உருவாக்கும் ஓவியன்....!!!

எண்ணங்களில்
வர்ணம் தவிர்த்து
வார்த்தைஜாலம் சேர்த்து
கவிதை வடித்து
ஓவியம் தீட்டத்தூண்டி
ஓவியனை உருவாக்கும் கவிஞன்...!!!

கலைமகளின் புத்திரர்களாம்
கவிஞனும்,ஓவியனும்
கவலைதனை நீக்கும் வைத்தியர்கள்..!!!



9 comments:

  1. கவிஞனும்,ஓவியனும் கொடுத்து வைத்தவர்கள்...
    tm2

    ReplyDelete
    Replies
    1. உண்மை சகோ...கொடுத்து வைத்தவர் பட்டியலில் இடம்பெற தொடர்ந்து பயணிப்போம்..

      Delete

  2. கலைமகளின் புத்திரர்களாம்
    கவிஞனும்,ஓவியனும்
    கவலைதனை நீக்கும் வைத்தியர்கள்..!//

    நிச்சயமாக
    அருமையான படைப்பு
    வைத்தியராய் தொடர்ந்து தொடர
    மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழர்..வைத்தியராக தொடர்ந்து முயற்சிக்கிறேன்..தங்கள் அனைவரின் வாழ்த்துக்களாலும், ஊக்கத்தினாலும்..

      Delete
  3. கவிஞனதும் ஓவியனதும் எண்ணமும் வண்ணமும் எழிலுறும் இடம் இனிது. கவிதை சிறப்பு

    ReplyDelete
    Replies
    1. தோழமையின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றியும், மகிழ்ச்சியும்.

      Delete
  4. எண்ணங்களையும் வர்ணங்களையும் தமிழில் குழைத்து கலை எனும் தூரிகை கொண்டு கவி ஓவியம் படைத்த கவி காயத்ரியை பாராட்டி வாழ்த்துகிறேன்!

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__