முகப்பு...

Wednesday 17 August 2011

வண்ணமயில்...


ஓவியனுக்கே,
ஓவியம்
கற்றுக்கொடுத்த
வண்ணமயிலே!!!

உன்னைக்கண்டுதான் 
ஓவியனே
வண்ணம் கலப்பதைக்
கற்றானோ?

அந்தப் பிரம்மனே 
போற்றும்
பேரழகு உனக்கு!

நீ 
நடனமிடும் 
அழகைக்கான,
அந்த நடராசனும்
நாட்டம் கொள்வானே!

உன்  அழகுக்கு முன்னால் 
அந்த 
ரதியும் தோற்றுப்போவாளே!  

உன் மயக்கும் 
அழகினால்,
உன் குரலைக் கூட 
மறக்க வைத்து 
எங்களை மயக்கி விட்டாயே!

அந்த 
மாயக்கண்ணன் முடிமேல்,
ஒய்யாரமாய் 
அமர்ந்து
காட்சி கொடுக்கும்.,
நீயும்,
மாயாவிதான்...


2 comments:

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__