முகப்பு...

Monday 10 August 2015

அறிந்தும்_அறியாமலும்..

மனப்பாறையை அழகு சிற்பமாக செதுக்க உளியாகப் பயன்படும் பகிரப்படாத உணர்வுகள்.. ‪#‎சிலபல_நேரங்களில்‬சிதறடிக்கச் செய்யும் வெடியாகவும் பயன்படலாம்.
****
மரணத்திற்கு மரணமில்லையெனும் உண்மையுணர்ந்து., மரணச்செய்தியை சலனமின்றி ஏற்கத் தெரிந்தவர்களுக்கு‪#‎சிலபல_நேரங்களில்‬ கல்நெஞ்சமென மகுடம் சூட்டப்படலாம்.  

***
ஒருவரின் சொல்லிலும்., செயலிலும் என்ன தவறு இருக்கும் அதை சுட்டிக்காட்டலாம் என்ற எண்ணத்தில் அணுகும்பொழுது அவற்றிலிருக்கும் கருத்துகள் கவனிக்கப்படாமல் நம்மையறியாமலேயே புறக்கணித்து ஒதுக்கப்ப(டலாம்)டுகின்றன. 
***
ஏதோ ஒன்றை யாரோ ஒருவர்மூலம் உணர்த்த இயற்கை முற்படுகையில், அதை உணர மறுக்கும் (நம்)அறியாமையே விதியாகிப்போகிறதோ..?!
****
அந்த நேரம் சுவாரசியம் கொடுக்கக்கூடிய எதுவாயினும் படித்து., வேடிக்கைப் பார்த்து அடுத்த சுவாரசியம் கிடைக்கும்வரை அதை மென்று தீர்வு பற்றி கவலைப்படாமல் கடந்து செல்வதே இயல்பாகிவிடுகிற(தோ)து..
smile emoticon

2 comments:

  1. நல்ல சிந்தனை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__