முகப்பு...

Sunday 31 August 2014

இறுதி சுவாசம்


ஒவ்வொரு இரவும் 
உனையடையும் 
என் வெற்றுக்குறுந்தகவல்..
என் ஆசைகளையும், காயங்களையும்
கூறாவிடினும்..
உறங்கச்செல்லும் நான்
மீளா உறக்கம் தழுவிடின்
என் இறுதி மூச்சும்
உனையே நேசித்து சுவாசித்ததை
நான் இறந்தபின்(னே)னும்
நீயறியவே...!! 

*****
நினைவென்னும் 
கூறிய நகங்களால் கீறப்பட்டு 
வெளிப்படும் கண்ணீர் முத்துக்கள்
அறிவிக்கும்...
ஆறிவிட்டதாக நினைக்கும் 

காயங்கள் புரையோடிவிட்டதை...!
*****

4 comments:

  1. அக்கா... கலக்கிட்டீங்க...

    ReplyDelete
  2. அன்பின் சகோதரி..
    தங்களுடன் விருது ஒன்றினைப் பகிர்ந்துள்ளேன்..
    இணைப்பு; http://thanjavur14.blogspot.com/2014/09/blog-post84-blog-award.html

    ReplyDelete
    Replies
    1. பகிர்விற்கு மிக்க நன்றி சகோதரரே..மனமார்ந்த நல்வாழ்த்துகள். வாழ்க வளமுடன். :)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__