முகப்பு...

Wednesday 18 September 2013

அறிந்தும்,அறியாமல்...

ஆயிரம் அன்புச்சொற்களையும்
மறக்கச்செய்கிறது
அலட்சியமாய் உதிர்க்கப்படும்
ஒற்றை கடுஞ்சொல்...
--
மகிழ்வுகளைத் தொலைத்து 
வலிகளை வாங்கிக்கொள்கிறோம் 
சிறு சிறு எதிர்பார்ப்புகளில்
நம்மையறியாமலேயே ..
--
கலைந்துசெல்லும் மேகமெனும் 
வாழ்க்கைப்பயணத்தில்..
தானே நிரந்தரமென 
தன்னையே ஏமாற்றிக்கொள்ளும் மனம்..!!!
---

10 comments:

  1. //ஆயிரம் அன்புச்சொற்களையும்
    மறக்கச்செய்துவிடுகிறது ஒற்றை கடுஞ்சொல்..//

    கடுஞ்சொற்களும் நம் நன்மைக்கு மட்டுமே சொல்லப்பட்டுள்ளன என பாஸிடிவ் ஆக எடுத்துக்கொண்டால், ஆயிரம் அன்புச் சொற்களையும் மறக்க முடியாது தானே!

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா...உண்மைதான்..கூறப்படும் கடுஞ்சொல் நன்மைக்காக இருக்கும்பட்சத்தில்..வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.._/\_

      Delete
  2. அறிந்தும் அறியாமலும் அறியவிரும்பாததுமாக நல்ல சிந்தனை! அருமையான கவிப் படைப்பு!

    அவ்வளவும் நூறுவீதம் உண்மை!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. முத்தான குறுங்கவிதைகள்! முதல் கவிதை மிகச் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  4. மகிழ்வுகளைத் தொலைத்து
    வலிகளை வாங்கிக்கொள்கிறோம்
    சிறு சிறு எதிர்பார்ப்புகளில்
    நம்மையறியாமலேயே .///
    நன்றாக சொன்னீர்கள்.
    அருமையான கவிதை.
    எதிர்பார்பு இல்லாமல் இருந்தாலே .ஏமாற்றம் என்ற வலி வராது.
    --

    ReplyDelete
  5. அறிந்தும் அறியாமல்.

    அறியாத சில அறிய விசயங்களை அறியச்செய்திருக்கிறது
    இந்த அறிந்தும்,அறியாமல் பதிவு.

    கவிகாயத்ரியின் சிந்தனையில் சிக்கிய மிக அற்புதமான படைப்பு இது.

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__