முகப்பு...

Wednesday 6 June 2018

அறிந்தும்-அறியாமலும்...

ஒருவர் செய்த ஏதோ ஒரு தவறுக்காகவோ அல்லது எண்ணற்ற தவறுகளுக்காகவோ சீ என உதறித்தள்ளி விலகிச்செல்ல ஒரு நொடிபோதுமானதாகவிருக்க., விலக்கிவைத்து விலகி நிற்பதால் சாதிக்கப்போவது என்னவென்று உள்ளெழும் கேள்வியால் வாழ்வின் யதார்த்தம் உணர்த்தப்படும் அந்த நொடி இறங்கிச்சென்று நெருங்கிச் செல்பவரை... வாழ்க்கைப்படிக்கட்டுகளில் ஏதோ ஒரு நேரத்தில்.. இயலாமையெனப் பார்க்கவைக்கலாம் காலம்.

******
#வாழ்க்கைப்பாதையில்.. இறங்கிவருதலை இயலாமை என நினைப்பவர்கள், அது அன்பின் காரணமாகவும் இருக்கலாம் என்பதை உணரத்தவறுகிறோமோ...!??  
#அறிந்தும்_அறியாமலும்...


********

அவனதிகாரம்...

#அவனதிகாரம்... 

அவனுக்களிக்க மானசீகமாய் முத்த ஒத்திகை பார்ப்பவளின் மனம் படித்தவனாய், இதழுக்கு ஓய்வளிக்க தன் கன்னத்தில் இடமளிக்கிறான்.   

Wednesday 9 May 2018

யாதுமானவன்...



என் 
அன்பு, பாசம், நேசமும் நீ..
கோவம், வெறுப்பும் நீ...!
மகிழ்ச்சியும் நீ..
வருத்தமும் நீ..!
வலியும் நீ..
ஆறுதலும் நீ..!
நோயும் நீ..
மருந்தும் நீ..!
பலமும் நீ,,
பலவீனமும் நீ..!
வெற்றியும் நீ..
தோல்வியும் நீ..!
படிக்கல்லும் நீ..
என் சொல்லும் நீ..!
மௌனமும் நீ..!
என் சிந்தையும் நீ..
செயலும் நீ...!
எண்ணமும் நீ...
எழுத்தும் நீ...!
என் பாடுபொருளும் நீ..
நான் பாடும்பொருளும் நீயென..
என் சிந்தையை சிறைபிடித்து
யாவ/ற்றிலும் நிறைந்து.,
யாதுமானவனாகிறாய்..!

Tuesday 13 March 2018

#ஊட்டுவித்த_தமிழ்ப்பற்றை_ஊக்குவிக்கும்_விழா...”

#ஊட்டுவித்த_தமிழ்ப்பற்றை_ஊக்குவிக்கும்_விழா...”

அன்புத்தோழமைகளுக்கு,

தமிழ்க்குடில் நிர்வாகியின் அன்பு வணக்கம்.


நமது தமிழ்க்குடில் அறக்கட்டளை, சென்னை குரோம்பேட்டையில் இயங்கிவரும் தூய மாற்கு பதின்முறை மேல்நிலைப்பள்ளியில் மார்ச் மாதம் முதல் தேதியன்று பரிசளிப்பு விழா ஒன்றை நடத்தியது.

ஏதோ போட்டிக்காக ஒரு நாள் மட்டும் என்றில்லாமல் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள், தொடர்ந்து வகுப்பில் தமிழ் கையெழுத்தை செம்மையாக எழுதிவருவதைப் பாராட்டி தமிழ்க்குடில் அறக்கட்டளை நினைவுப்பரிசும், நூல்களும் வழங்கிப் பாராட்டியது.

மாணவர்களின் இச்செயலில் ஆசிரியர்களின் பங்கும் பெரிதென உணர்ந்து தமிழ்த்துறை ஆசிரியர்களுக்கும் நினைவுப்பரிசும், நூல்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.


பள்ளிக்கு நினைவுப்பரிசும், நூலகத்திற்கு தமிழ் சொல்லகராதியும் வழங்கப்பட்டது.

தவத்திரு மறைமலையடிகள் அவர்களின் பேரன் மறை தி. தாயுமானவன் அவர்கள் விழாவின் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.
தமிழ்க்குடில் அறக்கட்டளையின் தலைவர் திரு. தமிழ்க்காதலன் அவர்கள் தமிழ்க்குடில் பற்றியும் மாணாக்கர்களின் திறமையையும் பாராட்டினார்.
பொருளாளர் காயத்ரி வைத்தியநாதன் நன்றியுரையாற்றினார்.

மறை. தி. தாயுமானவன் அவர்கள், அவரது துணைவியார் திருமதி வாசுகி அவர்கள், தமிழ்க்குடில் அறக்கட்டளையின் தலைவர் 
திரு, தமிழ்க்காதலன் அவர்கள், பொருளாளர் காயத்ரி வைத்தியநாதன் மற்றும் தமிழ்க்குடிலின் குடும்ப உறுப்பினரான சகோதரர் திரு.இராமச்சந்திரன் அவர்கள் மாணவர்களுக்கும், தமிழ்த்துறை ஆசிரியைகளுக்கும் தமிழ்க்குடில் சார்பாக கேடயங்களையும், நூல்களையும் வழங்கி சிறப்பித்தனர்.


விழா சிறப்பாக அமைய முழு ஒத்துழைப்பு வழங்கிய பள்ளி நிர்வாகத்திற்கும், விழா ஒருங்கிணைப்பில் பெரிதும் பங்குகொண்ட சகோதரர் திரு. இராமச்சந்திரன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறோம்,

என்றென்றும் அன்புடன்,

தமிழ்க்குடில் நிர்வாகம்.