Monday, 6 October 2014
Sunday, 31 August 2014
| Tweet | |||||
இறுதி சுவாசம்
ஒவ்வொரு இரவும்
உனையடையும்
என் வெற்றுக்குறுந்தகவல்..
என் ஆசைகளையும், காயங்களையும்
கூறாவிடினும்..
உறங்கச்செல்லும் நான்
மீளா உறக்கம் தழுவிடின்
என் இறுதி மூச்சும்
உனையே நேசித்து சுவாசித்ததை
நான் இறந்தபின்(னே)னும்
நீயறியவே...!!
*****
நினைவென்னும்
கூறிய நகங்களால் கீறப்பட்டு
வெளிப்படும் கண்ணீர் முத்துக்கள்
அறிவிக்கும்...
ஆறிவிட்டதாக நினைக்கும்
காயங்கள் புரையோடிவிட்டதை...!
*****
Sunday, 17 August 2014
| Tweet | |||||
அறிந்தும் அறியாமலும்...
இதுவும் கடந்துபோகுமென்ற நம்பிக்கையும் மனதைவிட்டு கடந்து செல்லும் ஏதோ ஒரு நேரத்தில்.
****
அன்று (பெண்கள்) அக்கம்பக்கத்து வீட்டுக்கதைகளை புறணி பேசியதற்கும்...
இன்று மாலை வீடு திரும்பியவுடன், அன்றாட அலுவலக நிகழ்வுகளையும், சக ஊழியர்களையும் பற்றி அலைபேசியிலும், சமூக வலைத்தளத்திலும் அலசுவதற்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை... விஞ்ஞான வளர்ச்சியைத்தவிர..:)
****
அறிவுச்சிறையிலிட்டாலும்
மனக்கதவை உடைத்து
வார்த்தைக்கு
முற்றுப்புள்ளிவைத்து
சுதந்திரக்காற்றை சுவாசிக்கிறது
கண்ணீர்முத்துக்கள்...!!
***
புலன்விசாரணையின்றி அங்கீகரிக்கப்படும் பொய்கள் வெற்றி கொள்கையில், உண்மைகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நிராகரிக்கப்படு(டலா)ம்..!
***
****
அன்று (பெண்கள்) அக்கம்பக்கத்து வீட்டுக்கதைகளை புறணி பேசியதற்கும்...
இன்று மாலை வீடு திரும்பியவுடன், அன்றாட அலுவலக நிகழ்வுகளையும், சக ஊழியர்களையும் பற்றி அலைபேசியிலும், சமூக வலைத்தளத்திலும் அலசுவதற்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை... விஞ்ஞான வளர்ச்சியைத்தவிர..:)
****
அறிவுச்சிறையிலிட்டாலும்
மனக்கதவை உடைத்து
வார்த்தைக்கு
முற்றுப்புள்ளிவைத்து
சுதந்திரக்காற்றை சுவாசிக்கிறது
கண்ணீர்முத்துக்கள்...!!
***
புலன்விசாரணையின்றி அங்கீகரிக்கப்படும் பொய்கள் வெற்றி கொள்கையில், உண்மைகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நிராகரிக்கப்படு(டலா)ம்..!
***
Monday, 4 August 2014
| Tweet | |||||
அறிந்தும், அறியாமலும்..
பசிக்கு பழைய சோறுகூட போடாது, அடுத்தவார விருந்தில் கலந்துகொள் என்பதுபோல் தேவைப்படும் நேரத்தில் அன்பை வழங்காது, நாம் ஓய்வாக இருக்கும் நேரத்தில் அன்பு பகிரப்படுகிறது(தோ).
*****
அம்மையப்பனும், ஆசானும் கற்றுக்கொடுக்காத
பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் காலம் கற்றுக்கொடுக்கும்.
*****
சிறிய பொய்தானேவென
நாளுக்கொரு பொய்யினால் அமைக்கப்படும்
உறவுப்பாலத்தில்...
மெல்லியதாய் விழு(ம்)ந்த பொய்த்திரை
நாளுக்கு நாள் அடர்வு கூடி
உணர்வுகள் பகிரத் தடையாகி
உறவுப்பாலத்தில்
விரிசல் உண்டா(க்)குமென்பதை
உணருவதில்லை..
****
வலித்தோட்டத்தில், விழிநீரூற்றி வளர்க்கப்படும் செடியில் மலரும் புன்னகைப்பூக்கள் மணம் வீசுவதில்லை.
****
*****
அம்மையப்பனும், ஆசானும் கற்றுக்கொடுக்காத
பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் காலம் கற்றுக்கொடுக்கும்.
*****
சிறிய பொய்தானேவென
நாளுக்கொரு பொய்யினால் அமைக்கப்படும்
உறவுப்பாலத்தில்...
மெல்லியதாய் விழு(ம்)ந்த பொய்த்திரை
நாளுக்கு நாள் அடர்வு கூடி
உணர்வுகள் பகிரத் தடையாகி
உறவுப்பாலத்தில்
விரிசல் உண்டா(க்)குமென்பதை
உணருவதில்லை..
****
வலித்தோட்டத்தில், விழிநீரூற்றி வளர்க்கப்படும் செடியில் மலரும் புன்னகைப்பூக்கள் மணம் வீசுவதில்லை.
****
Monday, 21 July 2014
| Tweet | |||||
#அறிந்தும் அறியாததும்..
யாரோ ஒருவரின்
பொறுப்பற்ற செயலால் உண்டாகும்
வீண் அலைச்சல்,
விரயமாகும் நேரம்..
வெட்டி செலவுகளுக்கு
நேரம் சரியில்லையென
தன் நேரத்தின்மீது பழிபோட்டு
அமைதிகொள்ளும் மனம்...
****
ஆயிரமாயிரம் பாடத்தையும்,
அனுபவத்தையும்
அன்றாடம் காலம் கற்பித்தாலும்..
கற்பிக்கப்பட்டதை விடுத்து,
மாயக்கண்ணாடியணிந்து
விரும்பிய பக்கத்தையே படிக்கிறோம்
வாழ்க்கைப்புத்தகத்திலிருந்து..
****
உண்மைகள் குறைந்த விலைக்கு வாங்கி அதிக நேரத்திற்கு விற்கப்படுமிடமாய் தொல்லைக்காட்சிகள்.
****
விரும்பியவைகளும்,
விரும்பியவர்களும்
விலகிநின்று வேடிக்கை பார்க்கத்துவங்கும்போது,
விலகிநிற்கும் காலனை
விரும்பியழைக்கும் மனம்...!
****
பொறுப்பற்ற செயலால் உண்டாகும்
வீண் அலைச்சல்,
விரயமாகும் நேரம்..
வெட்டி செலவுகளுக்கு
நேரம் சரியில்லையென
தன் நேரத்தின்மீது பழிபோட்டு
அமைதிகொள்ளும் மனம்...
****
ஆயிரமாயிரம் பாடத்தையும்,
அனுபவத்தையும்
அன்றாடம் காலம் கற்பித்தாலும்..
கற்பிக்கப்பட்டதை விடுத்து,
மாயக்கண்ணாடியணிந்து
விரும்பிய பக்கத்தையே படிக்கிறோம்
வாழ்க்கைப்புத்தகத்திலிருந்து..
****
உண்மைகள் குறைந்த விலைக்கு வாங்கி அதிக நேரத்திற்கு விற்கப்படுமிடமாய் தொல்லைக்காட்சிகள்.
****
விரும்பியவைகளும்,
விரும்பியவர்களும்
விலகிநின்று வேடிக்கை பார்க்கத்துவங்கும்போது,
விலகிநிற்கும் காலனை
விரும்பியழைக்கும் மனம்...!
****
Friday, 18 July 2014
| Tweet | |||||
மழலையர் உலகம்..
மழலைகள் தேவதைகள்தாம்
மறுக்கவில்லை..
அவர்கள் வாழும் உலகம்
தேவதைகளால் மட்டும் ஆனதல்ல..!
தேள்களும், தேனீக்களும்
மனிதநேயம் கொண்டவர்களும்,
மனநோயாளிகளும் கலந்துவாழும்
உலகமென்பதை மறக்கவேண்டாம்...!
நேர்மறையென்னும்
கவிதை கூறியே
கற்பனையில் வளர்க்காது
எதிர்மறையும் இருக்குமென்ற
யதார்த்தம் கூறியே..
தேவதைகள் சாத்தான்களை
எதிர்கொள்ளும் மன சக்தியை
கொடுத்தே இயல்பாய் வளர்ப்போம்..!!
Tuesday, 1 July 2014
| Tweet | |||||
காதல் கிறுக்கல்...
தன்னையும், என்னையும்
எண்ண நேரமில்லா நீயும்..
உன்னையே எண்ணும் நானும்...
வார்த்தை தவிர்த்து..
மௌனத்தில் மனம் பகிர்ந்து...
கண்களில் காதல்பேசி..
நாலாறுமணியும் நகராதமர்ந்து...
இருமனம் ஒன்றாகிக் கனியும்
காலத்தை எதிர்நோக்கியேக்
காத்திருக்கும் காதல்..!!
*********
அறிவுச்சிறையிலிட்டாலும்
மனக்கதவை உடைத்து
வார்த்தைக்கு
முற்றுப்புள்ளிவைத்து
சுதந்திரக்காற்றை சுவாசிக்கிறது
கண்ணீர்முத்துக்கள்...!!
*******
எண்ண நேரமில்லா நீயும்..
உன்னையே எண்ணும் நானும்...
வார்த்தை தவிர்த்து..
மௌனத்தில் மனம் பகிர்ந்து...
கண்களில் காதல்பேசி..
நாலாறுமணியும் நகராதமர்ந்து...
இருமனம் ஒன்றாகிக் கனியும்
காலத்தை எதிர்நோக்கியேக்
காத்திருக்கும் காதல்..!!
*********
அறிவுச்சிறையிலிட்டாலும்
மனக்கதவை உடைத்து
வார்த்தைக்கு
முற்றுப்புள்ளிவைத்து
சுதந்திரக்காற்றை சுவாசிக்கிறது
கண்ணீர்முத்துக்கள்...!!
*******
Subscribe to:
Posts (Atom)



