முகப்பு...

Friday 25 January 2013

கவி மாலை...

சிந்தையில் பூத்த
எண்ண மலர்களை
வார்த்தையெனும் நார்கொண்டு
கவிதை மாலையாக்கி
உனக்கு சமர்பிக்க
எண்ணுகிறேன்..

வார்த்தைநாரும் வசப்படாதுபோக
உள்ளத்தில் உதிர்த்தவைகளை
மனதினில்  மாலையாக்கி
உதிரிப்பூக்களாய் அர்ச்சிக்கிறேன்..

சிந்தையில் இருப்போனே
எம்மனம் அறிவாய்
மலர்களின் நறுமணம் உணர்வாய் நிறைவாய்
என்னிறைவா,,!!

3 comments:

  1. சிறப்பான படைப்பு! நன்றி!

    ReplyDelete
  2. அக்கா... ஒவ்வொரு தடவையும் அருமை அருமையின்னு சொல்லி போரடிச்சிப் போச்சு...
    அதனால...
    அதனால...

    கவிதாயினி எங்க அக்கா எப்பவுமே சூப்பராத்தான் கவிதை எழுதுவாங்கன்னு சொல்லிடுறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹ...அது யாரு கவிதாயினி..? நன்றி தம்பி..:)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__