முகப்பு...

Saturday 3 November 2012

இறுதி ஆசை..!!



கண்மலர்களும்
நின் காதல்பார்வையில் கிறங்க..

செவிகளும் உன் காதல்கீதம் கேட்டபடி
ஓய்வெடுக்க...

என் கேசக்குழந்தை
நின் கரங்களில் துள்ளி  விளையாட...

சுவையறியும் என் நாவும்
உனையே  உச்சரிக்க...

ஐயிரண்டு விரல்களும்
உன் கன்னம் வருட

கனிரசம் அருந்திய
உன்னிதழ் சுவைத்து..

உன் தேகம் வீசும்
காதல் சுவாசித்து

நின்காதலில் நெக்குறுகும்
மனம் உனையே எண்ண..

ஏழேழு ஜென்மத்திற்கும்
அச்சாரமாய்  என் காதல் ஏற்று
பானுவும், மதியும் பாரினில் உள்ளவரை
பிரபஞ்சம் நம் காதல் பேச

நெகிழும் என் தேகம்
உன் மடி கிடந்து
உயிர்துறக்க விரும்புகிறேன்...!!!








9 comments:

  1. ...ம்... அழகான ரசிக்க வைக்கும் வரிகள்...

    வாழ்த்துக்கள்...
    tm2

    ReplyDelete
  2. தூய்மையான காதல் உணர்வு கொண்டவளின்
    மன நிலையை முழுமையாகப் படம் பிடித்துக் காட்டும்
    கவிதை மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சிறப்பான வரிகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__