முகப்பு...

Monday 3 September 2012

எனது பொன்மொழிகள்..:)


அன்புக்குரியவர் மீது நாம் கொள்ளும் கோபம்கூட மயானபூமியில் கிட்டிய ஞானமாய் நீர்த்துப்போய் விடுகிறது விரைவில்
---காயத்ரி.
*******
நாம் செலுத்தும் அன்பை ஏற்கும் மனநிலையில் ஒருவர் இல்லாதபொழுது அவர் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு அவரின் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுகிறது
---காயத்ரி
*******
ஒரு நேரம் மனதைப் புரிந்தவர்களாக விளங்குபவர்கள் கூட,
ஒரு நேரம் புதிராக காணப்படுவதுதான் மனிதனின் இயல்போ..??
---காயத்ரி
******
நம்மிடம் அனைவரும் உண்மையாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம், அனைவரிடமும் உண்மையாகத்தான் இருக்கிறோமா என்று எண்ணிப் பார்க்கத் தவறுகிறோமே ஏன்....!!?? 
--- காயத்ரி
******
ஒருவர் நம்மிடம் உண்மை பேசும்போதுதான் (அது கசந்தாலும், வலித்தாலும்) அவர் நமக்கு வகுத்த எல்லை என்ன என்பதையறியவும்,நாம் எந்த எல்லையில் இருந்துவருகிறோம், அந்த எல்லை சரிதானா என்ற சுய பரிசோதனை செய்துகொள்ளவும் உதவுகிறது.
---காயத்ரி.
******

8 comments:

  1. அழகான அர்த்தமுள்ள பொன்மொழிகள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்ல தத்துவங்கள் அக்கா.

    ReplyDelete
  3. அருமை...

    மிகவும் பிடித்தது :

    /// நம்மிடம் அனைவரும் உண்மையாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம், அனைவரிடமும் உண்மையாகத்தான் இருக்கிறோமா என்று எண்ணிப் பார்க்கத் தவறுகிறோமே ஏன்...? ///

    ReplyDelete
  4. // நம்மிடம் அனைவரும் உண்மையாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம், அனைவரிடமும் உண்மையாகத்தான் இருக்கிறோமா//
    ஒழுங்காக என் வலை பூவிற்கு வந்து எதாவது கருத்து சொல்லணும்.ஏன் என்றால் நான் உங்கள் பதிவிற்கு வந்து கருத்து சொல்லியிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழர்...இப்படி மிரட்டி சொன்னா கருத்திடாம இருக்க முடியுமா..அவசியம் பார்வையிடுகிறேன் தங்கள் வலைப்பூவை

      Delete
  5. உங்க நேர்மை ரொம்ப புடிச்சிருக்கு.

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__